உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

லக்னோ:
உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு 14-ம் தேதியும், 3-வது கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதியும், 4-வது கட்டம் 23-ம் தேதியும், 5-வது கட்டம் 27-ம் தேதியும், 6-வது கட்டம் மார்ச் 3-ம் தேதியும் நடந்து முடிந்தது. இதுவரை மொத்தம் 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 
இந்நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் 10-ம் தேதி எண்ணப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.