தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… அமித் ஷா அதிர்ச்சி தகவல்!

மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (
CISF
) 53 ஆவது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர்
அமித் ஷா
பேசியது:

நாட்டின் பாதுகாப்பு தேவைக்கு ஏற்ப மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவு விரிவுப்படுத்தப்பட வேண்டும். தற்போது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்படுகின்றன.

இதுபோன்ற அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு எதிர்கால பாதுகாப்பு தேவைகளுக்காக நம்மை நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆளுநர் பதவிக்கு கல்தா? – செம டென்ஷனில் தமிழிசை சவுந்தரராஜன்!

அடுத்த கால் நூ்ற்றாண்டுகளுக்கு தேவையான விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். இதன்படி தனியார் ‘செக்யூரிட்டி’ நிறுவனங்களும், சிஐஎஸ்எஃப் அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் அமைப்பாக சிஐஎஸ்எஃப் திகழ வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.

மொத்தம் 1.64 லட்சம் பேர் கொண்ட படைப் பிரிவான சிஐஎஸ்எஃப், நாடு முழுதும் உள்ள 65 விமான நிலையங்கள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.