ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!

கணவன் மீது பொய்வழக்கு போடப்படுகிறது என பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

மதுரை மேலபனங்காடியை சேர்ந்தவர் குமார் . இவரது மனைவி மகேஸ்வரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை மீட்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் என் கணவர் மீது திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தை போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு துன்புறுத்தி வருகின்றனர் தெரிவித்தார். பொய்வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.