மீண்டும் சர்ச்சைகளில் சிக்கும் சிம்பு..குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர்
சிம்பு
தற்போது தான் சற்று சர்ச்சைகளுக்கு ஓய்வு கொடுத்து தன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு ஓய்வு விட்டாலும் சர்ச்சைகள் அவரை விடாது போல.
மாநாடு
படத்தின் மாபெரும் வெற்றியினால் சிம்புவின் மார்கெட் மளமளவென உயர்ந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகிவருகின்றார்.

சிம்பு பல பிரச்சனைகளில் சிக்கினாலும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் தான் இருந்தன. அதற்கு காரணம் சிம்புவின் திறமை தான். எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் சரி ஒரே டேக்கில் முடிக்கக்கூடிய நடிகர் தான் சிம்பு. மேலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கூட்டமும் ஒரு காரணம்.

பாலாவை பாதித்த அந்த விஷயம்..!விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணமா ?

அவர் படங்கள் மூன்று வருடங்களுக்கு வெளியாகாமல் இருந்தபோதும் ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்களை சமாதித்து வைத்துள்ளார் சிம்பு. இந்நிலையில் மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு
வேல்ஸ்
தயாரிப்பில் மூன்று படங்களில் கமிட்டானார். கெளதம் மேனன் இயக்கத்தில்
வெந்து தணிந்தது காடு
, மற்றும் கோகுலின் இயக்கத்தில்
கொரோனா குமார்
ஆகிய படங்களில் கமிட்டானார்.

சிம்பு

மேலும் ஒரு படம் பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா குமார் படம் கைவிடப்படும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகின்றன. ஏனென்றால் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியினால் தன் சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். அதன் காரணமாக சிம்பு கொரோனா குமார் படத்திற்கு அதிக சம்பளம் கேட்டுவருகிறாராம்.

சிம்பு

ஆனால் கொரோனா குமார் படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்யும்போது மாநாடு படம் வெளியாகவில்லை. எனவே சிம்புவிற்கு பழைய சம்பளமே பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது தன் மார்க்கெட் உயர்ந்ததாகவும் அதன் காரணமாக கொரோன குமார் படத்திற்கு சம்பளத்தை உயர்த்தி தரும் படியும் சிம்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளாராம்.இப்படியே போனால் படம் கைவிடும் சூழலும் ஏற்படும் என சிலர் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.