குழந்தையை கொன்ற தந்தை கைது| Dinamalar

லாகூர்:பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பாஞ்சாப் மாகாணம் மியான்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஜாய்ப் கான், 22. இவர் தனக்கு முதலில் ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். கடந்த வாரம் இவர் மனைவிக்கு தலைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்காமல் கடும் ஆத்திரத்தில் இருந்த கான், கடந்த 7ம் தேதி வீட்டுக்கு வந்தார்.

பிறந்து ஏழு நாட்களே ஆகியிருந்த தன் குழந்தையை சுட்டுக் கொலை செய்தார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, பாக்கர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஷஜாய்ப் கானை பஞ்சாப் மாகாண போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.