தருமபுரியில் குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள் கொண்ட ஊசிகள் பறிமுதல்.!

தருமபுரி மாவட்டத்தில், குடிசை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மருந்துகள், ஊசிகளை மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் ஊசியை போதைக்காக பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில், மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதில், கோம்பேரி கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல், வலி நிவாரணி மருந்தை போதை ஊசியாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஏலகிரி கிராமத்தை சேர்ந்த முருகேசன் வீட்டில் பெட்டி பெட்டியாக  போதை மருந்துகள் கொண்ட ஊசிகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், இதில் தொடர்புடைய வஜ்ரவேல், மருந்தக உரிமையாளர் சோமசுந்தரம், காமராஜ், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.