டி23 புலியை பிடிக்க செலவு ரூ.11.34 லட்சம்: வனத்துறை தகவல்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை கொன்ற டி23 ஆட்கொல்லி புலியை, பிடிக்கும் பணியை வனத்துறையினர் செப்., 24ல் துவங்கினர்; அக்.,15ல் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். புலி, தற்போது கர்நாடகா மாநிலம் மைசூரு மிருக காட்சி சாலையில் உள்ள, புலிகள் மறுவாழ்வு மையத்தில். பாரமர்த்து வருகின்றனர். இந்த புலியை பிடிக்க, செலவிடப்பட்ட தொகை குறித்து வக்கீல் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டிருந்தார். அதில், ‘புலியை பிடிக்க மற்றும் பராமரிப்புக்கு 11.34 லட்சத்து 105 ரூபாய் செலவிடப்படடது’ வனத்துறையின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.