கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு (Photos)


யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம்
அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது. இதன்போது சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும்
திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட
பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி
பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் விஜேகுணரட்ண, யாழிற்கான
இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
க.மகேசன், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார,
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நெடுந்தீவு பிரதேச செயலாளர்
சத்தியசோதி மற்றும் மதகுருமார்கள், கடற்படை இராணுவ அதிகாரிகள், பொலிஸ்
அதிகாரிகள் பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். 

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.