கனடாவில் இரண்டு பெண்கள் கொடுத்த புகாரால் கைதான நபர்! மசாஜ் செய்ய தடை விதிப்பு



கனடாவில் மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வான்கூவரில் தான் இச்சம்பவம் கடந்த மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடந்துள்ளது.
அந்த இரண்டு நாட்களில் மசாஜ் நிலையத்திற்கு மசாஜ் செய்து கொள்ள வந்த 34 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களிடம் Jun Dong Gao (46) என்பவர் தவறாக நடந்து கொண்டு அத்துமீறியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Jun-ஐ கைது செய்தனர்.
தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் அவர் மீது இரண்டு வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் பதிய தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள Jun வாடிக்கையாளர்களை தொட்டு செய்யக்கூடிய மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் தகவல் தெரிந்தவர்கள் பாலியல் குற்றப்பிரிவுக்கு அழைக்குமாறும் பொலிசார் தெரிவித்துள்ளனர்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.