பழநி: பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குப் பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது.

கொடி

இதனைத் தொடர்ந்து அருள்மிகு வள்ளி,தெய்வானை சமேத் முத்துக்குமாரசாமிக்கும் மற்றும் கொடி மரத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு ,வெள்ளி தேரோட்டமும் மார்ச் 17-ம் தேதியும், திருத்தேரோட்டம் ஏழாம் நாளான மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமையும் நடைபெறுகின்றன. மார்ச் 21-ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது.

கொடியேற்றம்

திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துப் பாதயாத்திரையாக வந்து பழநி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளைப் பழநி கோவில் நிர்வாகம் மற்றும்‌ மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழிநி கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.