அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:
ழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் அவர்களின் மகன் எம்.என். அஜய் தென்னவன் – ஆர். பாரதி ஆகியோரின் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசினார். அப்போது, நம்முடைய மணமக்களை நான் வாழ்த்துகிற நேரத்தில் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், ‘வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக’ மணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி.. வணக்கம்…” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.