ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில்  இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.  அதன் பிறகு  விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை கடந்த மாதம் 25ந்தேதி அன்று உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.