ஹோலி திருநாளையொட்டிக் கோவிலில் வழிபட்டும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பொதுமக்கள் கொண்டாட்டம்.!

நாடு முழுவதும் இன்று ஹோலி திருநாளையொட்டிக் கோவிலில் வழிபட்டும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹோலித் திருநாளையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஹோலித் திருநாளையொட்டி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உத்தரப் பிரதேசம் மதுராவில் பிருந்தாவனத்தில் உள்ள பங்கி பிகாரி கோவிலில் ஹோலியையொட்டி ஏராளமானோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசி வாழ்த்துத் தெரிவித்தனர்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள பள்ளியில் மாணவர்கள் ஆடிப் பாடியதுடன் பூக்களை அள்ளி வீசிக் கொண்டாடினர்.

கொல்கத்தாவில் ஹோலிக் கொண்டாட்டமாக மக்கள் ஒருவர் மீது ஒரு வண்ணப்பொடிகளைப் பூசி மகிழ்ந்தனர். பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் இசையுடன் கூடிய பாடல்களுக்குப் பெண்களும் சிறுமியரும் நடனமாடி மகிழ்ந்தனர்.

ராஜஸ்தானின் ஜெய்சல்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆடிப் பாடி ஹோலி கொண்டாடினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.