தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது விஜயசாந்தி புகார்

ஹைதராபாத்: பாஜக நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி சமூக வலைதளம் மூலம் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை தீவிரமாக விமர்சித்துள்ளார்.

அதில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பிராணஹிதா புஷ்கரம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தெலங்கானாவில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது பிராணஹிதா புஷ்கரம் சிறப்பாக நடந்தது. அதில் இப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் கூட புனித நீராடினார். இப்போது இவரே முதல்வராக இருந்தும் கூட நடவடிக்கையோ நிதி ஒதுக்கீடோ செய்யவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.