கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை| Dinamalar

பெங்களூரு: மேகதாது அணை திட்டம் தொடர்பாக பெங்களூருவில், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தமிழகம் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் குடிநீர் சார்ந்த திட்டம் என்பதால் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கர்நாடகா வலியுறுத்தி வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடக மாநில காங்கிரஸ் பேரணி நடத்திய நிலையில், மாநில பட்ஜெட்டில் அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கும் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்.,கின் எச்.கே.பாட்டீல், டி.கே.சிவகுமார், எம்.பி., பாட்டீல், மதசார்பற்ற ஜனதா தளத்தின் பந்தெப்பா அனைத்து கட்சி தலைவர்கள், காவிரி விவகாரத்தில் கர்நாடகா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.