சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி.. அதிரடி காட்டிய போலீசார்.!

மதுரவாயில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் உதவி எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.

இதுகுறித்து அந்த பெண் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்த வளசரவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும், விசாரணையில் இவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சுமன் என்பவர் என்பது தெரியவந்தது. மதுபோதையில் அந்த நபர் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரிடம் இருந்து அவரது இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.