வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. காவல்துறை விசாரணை..!

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம்  மாவட்டம்  ,  கீரிப்பட்டி  பகுதியை  சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல  வகுப்பிற்கு சென்ற அவர் வகுப்பறையில் திடீரென  மயங்கி  விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவ்வே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை  செய்து  கொண்டாரா?    அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.