பங்குனி உத்திர விழா: சபாநாயகர் பங்கேற்பு| Dinamalar

அரியாங்குப்பம் : ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் அடுத்த ஓடவெளி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது.

பக்தர்களின் பால்குடம் ஊர்வலத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, சாமி தரிசனம் செய்தார்.அதே போல், பங்குனி உத்திரத்தையொட்டி, அரியாங்குப்பம் சுப்பையா நகர், முருகன் கோவிலில் நடந்த அலகு காவடி ஊர்வலத்தை எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.