சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகரை அரசுப்பள்ளியில், சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சூளகரை அரசு உயர்நிலைப் பள்ளியில், மதிய உணவாக மாணவர்களுக்கு கீரை சாதமும், முட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 6ஆம் வகுப்பு மாணவர்கள் 7 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆசிரியர்கள் தகவல் கொடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர், மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், சமையலர் புவனேஸ்வரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதிய உணவு சாப்பிட்ட மற்ற மாணவர்கள் நலமுடன் இருப்பதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.