இலங்கைக்கு உதவுவதாக பிரதமர் மோடி உறுதி:பசில்| Dinamalar

கொழும்பு:இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக் ஷே தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக் ஷே மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு மேலும் 7500 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து இலங்கை திரும்பிய பசில் ராஜபக் ஷே செய்தியாளர்களிடம் பேசியதாவது: இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு தொடர்ந்து உதவுவதாக இந்திய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அத்துடன் இந்தியா – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சர்வதேச அமைப்புகளில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தரும் எனவும் மோடி கூறியுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.