ரஜினி கொடுத்த 'அந்த' கிஃப்ட்டை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கும் தனுஷ்!

நடிகர்
தனுஷ்
ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து அவருக்கு மூத்த மருமகன் ஆனார். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மகள் விருப்பத்தை நிறைவேற்ற திருமணம் செய்து வைத்தார்
ரஜினிகாந்த்
.

இருப்பினும் தனுஷ் தனக்கு மருமகன் ஆன பிறகு அவரை தனது மூத்த மகன் என்றே தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் இனி கணவன் மனைவியாக வாழப்போவதில்லை என அறிவித்தனர்.

அப்படியே தாத்தாவை உரித்து வைத்திருக்கும் தனுஷின் மூத்த மகன்!

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தே இந்த விஷயத்தில் தலையிட்டு சமாதான முயற்சியை மேற்கொண்டார். இருப்பினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனுஷ் ஒரு தீவிர சிவ பக்தர் என்பதால், ரஜினிகாந்த் அவருக்கு இமய மலையில் இருந்து ருத்ராக்ஷ மாலை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். தனுஷ் அந்த மாலையை அணிந்திருக்கும் போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி வந்தது. ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்த பின்னர் தனுஷ் கழுத்தில் அந்த மாலையை காண முடியவில்லை.

ட்ரான்ஸ்ப்ரன்ட் மோனோகினியில் பிறந்தநாள் விழாவில் விருந்து வைத்த வாரிசு நடிகை!

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இளையராஜாவின் இசை கச்சேரியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் அந்த ருத்ராக்ஷ மாலையை அணிந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிச்சயம் ரஜினி சந்தோஷப்படும் தகவலை தனுஷ் கூறுவார், அவரை சந்தோஷப்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.