ஐஸ்வர்யாவுக்காக எழுதியதா? அப்பாவின் பாடலை கேட்டு மகிழ்ந்து போன தனுஷின் மகன்கள்!

சென்னை தீவுத்திடலில் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்
தனுஷ்
தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றார். இளையராஜாவின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த தனுஷ் பின்னர் ஸ்டேஜிக்கு சென்று இளையராஜாவின் பாடல்களை புகழ்ந்து பேசினார்.

ரஜினி கொடுத்த ‘அந்த’ கிஃப்ட்டை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கும் தனுஷ்!

பின்னர் தான் எழுதிய தாலாட்டு பாடலை தங்களின் அனுமதியுடன் பாடலாமா என கேட்டு மேடையில் பாடினார் தனுஷ். “கண்மூடிடு பூவிழி மானே… தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ ஆரிரோ..

நிலவோடு சேர்ந்து பனிக்காத்தும் வீச.. உன் காதில் இதமா தாலாட்டு பாட… கண்மூடிடு பூவிழி மானே தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ… ஆரிரோ… என்று மெலோடியாக பாடினார் தனுஷ்.

தனுஷ் மேடையில் பாடுவதை பார்த்த அவரது மகன்கள் யாத்ராவும் லிங்காவும் கைகளை தட்டியும் சிரித்தும் மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்காக தான் தனுஷ் இந்த பாடலை பாடியதாகவும், அவர் உள்ளுக்குள் ஐஸ்வர்யாவை நினைத்து உருகுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

18 ஆண்டுகள் கணவன் மனைவியாக இருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் மாறி மாறி அப்பாவிடமும் அம்மாவிடமும் உள்ளனர். தற்போது
ஐஸ்வர்யா
ஹைத்ராபாத்தில் உள்ளதால் மகன்கள் இருவரும் தங்களின் அப்பாவான தனுஷிடம் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.