உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் ஒரு உண்மை சம்பவம்!

கொரோனா காலகட்டத்தில், பொதுமக்கள் தங்களின் உடல்நிலை குறித்து அதிகம் கவனம் செலுத்தினர். இந்த நேரத்தில் தான் ஸ்மார்ட் வாட்ச் மோகம் அதிவேகமாக பரவியது. நுகர்வோரின் நாட்டம் ஸ்மார்ட்வாட்ச் வசம் திரும்பியது.

கண நேரத்தில் உடல்நிலை மாற்றங்களை ஸ்மார்ட்வாட்ச்சால் கண்காணித்து கூற முடியும். இதன் காரணமாக தான் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஸ்மார்ட்வாட்ச்சுகளை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பல நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்திருந்தாலும், இந்தியாவில் நடப்பது இதுவே முதன்முறை.

பரிசளிக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச்

ஹரியானா மாநிலத்தில், ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் ஒரு பல் மருத்துவரின் உயிரையே காத்துள்ளது. அவசர உதவி தேவைபட்ட நேரத்தில், ஆப்பிள் வாட்ச் சரியாக கணித்து, அவருக்கு மருத்துவர் உதவி தேவைப்படுகிறது என்று அறிவுறுத்தியுள்ளது.

Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது – பயனர்கள் விரும்பிய iPhone SE-ஆ இது!

நிதேஷ் சோப்ரா எனும் பல் மருத்துவர், ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் தனது மனைவிக்கு கடந்த வருடம் ஆப்பிள் வாட்ச் 6 சீரிஸை பரிசளித்துள்ளார். இந்நிலையில், நிதேஷ் தனது மனைவியிடம் நெஞ்சுவலி எடுப்பதாகக் கூறியுள்ளார்.

உடனடியாக தனக்கு கணவர் பரிசளித்த ஸ்மார்ட்வாட்சை எடுத்து, அவர் கையில் கட்டிவிட்டு இதயத் துடிப்பைக் கண்காணித்துள்ளார். அப்போது இதயத் துடிப்பு சீராக இல்லை என ஆப்பிள் வாட்ச் சோதனை முடிவு தெரிவித்துள்ளது. மேலும், உடனடியாக மருத்துவரை அணுகும்படி பரிந்துரைத்துள்ளது.

உயிரை காத்த ஆப்பிள் வாட்ச் 6

சற்றும் தாமதிக்காமல், மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச் சென்று பரிசோதித்து பார்த்தபோது, நிதேஷின் இருதயத்தில் 99.9% விழுக்காடு அடைப்பு இருந்தது ஆன்ஜியோகிராம் சோதனையில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அபாய கட்டம் என்பதால், நிதேஷுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சில நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து நிதேஷின் மனைவி, ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆப்பிள் வாட்ச் என் கணவரின் உயிரை காப்பாறியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் குக், “உங்களின் கதையைப் பகிர்ந்ததற்கு நன்றி. உங்களுக்கு தேவையான நேரத்தில் ஆப்பிள் வாட்ச் உதவிகரமாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நலமுடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

இதுகுறித்து பேசியிருக்கும் நிதேஷின் மனைவி, “35 வயதுக்கும் கீழுள்ள என் கணவருக்கு மாரடைப்பு வரும் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. ஆப்பிள் வாட்ச் இல்லையென்றால், என்ன நடந்திருக்கும் என்றே நினைத்து பார்க்க முடியவில்லை. தக்க சமயத்தில் கணவர் உயிரை காத்த ஆப்பிள் வாட்சுக்கு நன்றி” என பூரித்தார்.

ஆப்பிள் வாட்ச் 6

ரெட்டினா எல்இடி திரையுடன் வரும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சத்துடன் வருகிறது. 7 வகையிலான தூக்கத்தை இந்த ஸ்மார்ட்வாட்ச் கண்காணிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, இதயத் துடிப்பு, ரத்த கொதிப்பு போன்ற உடலியல் மாற்றங்களையும் கண்காணிக்கிறது. கூடுதலாக, ஆப்பிள் வாட்ச் மருத்துவர்களுடன் இணைப்பில் இருக்கும். சில ஆபத்து காலகட்டத்தில், தானாக முன்வந்து மருத்துவர்களின் தேவை குறித்து அவர்களுக்கு பரிந்துரைக்கும் சிறப்பம்சங்கள் கொண்டதாகும்.

Read more:
இன்ஸ்டாகிராம்-க்கு குட் பை – ரஷ்யாவின் புதிய ‘Rossgram’ ஆப்!டிசோ வாட்ச் ஆர்: அமோலெட் திரையுடன்oppo watch free: AMOLED திரை, புதிய ஸ்டைல், பெரிய பேட்டரி

ஆப்பிள் வாட்ச் விவரங்கள்முழு அம்சங்கள்சிறப்புகள்Call Function, Fitness Trackingடிஸைன்Rectangular Dial Designடிஸ்பிளே1.5 Inch (3.81 cm) Displayமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.