”எங்க ஆளை தாக்கியது ஏன்?”- அதிமுக தலைமையகத்தில் இபிஎஸ்-ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

அதிமுக தலைமையகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த விவாதம் சட்டப்பேரவையில் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
image
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் கல்விக்கடன் ரத்து அறிவிப்பு வெளியிடப்படாதது குறித்து கேள்வியெழுப்ப முடிவு செய்யப்ட்டது.
ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
இதனிடையே, இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் மணிகண்டன் என்பவரை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், தலைமை அலுவலக நிர்வாகிகள் சிலரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
image
இந்நிலையில், மணிகண்டனை தாக்கியது ஏன் என்று ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கேள்வியெழுப்பினர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.