சாலையை கடக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..!

சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. இவர் அங்குள்ள கிரானைட் கம்பெனியில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவரும் இருசக்கர வாகனத்தில் வந்தவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருதமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.