இந்தியாவில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயம் – பிரதமர் மோடி

பிரதமர் புமியோ கிஷிடோ பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவை, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி வரவேற்றார்.இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா – ஜப்பான் இடையேயான 14ஆவது வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது.

பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – ஜப்பான் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவது, இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலும், உலக அளவிலும் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் என்றார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றி அமைதிக்கான தீர்வு எட்டப்பட வேண்டுமென்றும் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.