சமுதாயக் கல்லுாரியில் தேசிய பயிற்சிப் பட்டறை| Dinamalar

புதுச்சேரி : தேசிய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் மகளிர் மனநலம் என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய பயிற்சிப் பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார்.

இந்திய கையுந்து பந்து வீராங்கனை நர்மதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பயிற்சி முகாமில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பெண்கள் எதிர்நோக்கும் உளவியல், உடல் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் முன்னேற்றத் துறை இயக்குனர் ஷிப்நாத் தேப், பல்கலைக்கழக விளையாட்டு துறை இயக்குனர் வசந்தி கலந்து கொண்டனர்.பயிற்சி பட்டறையில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி, சமுதாய கல்லுாரி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.