வாஷிங்டன்:மொராக்கோ நாட்டிற்கான அமெரிக்க துாதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புனித் தல்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கான அமெரிக்க துாதரை அறிவித்துள்ளார். இப்பதவியில், அமெரிக்க வெளியுறவு துறை மூத்த ஆலோசகரான புனித்தல்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.கொலம்பியா பல்கலையில் சர்வதேச விவகார துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள புனித் தல்வார், வாஷிங்டனில் வசித்து வருகிறார்.
வெளியுறவு துறையில் அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்கள் பிரிவு இணையமைச்சராக பணியாற்றியவர். பார்லி., பிரதிநிதிகள் சபையிலும், வெளியுறவு கொள்கை உருவாக்க குழுவிலும் முக்கிய பங்காற்றியவர். கடந்த வாரம், காஷ்மீரை சேர்ந்த இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகால், அமெரிக்காவிற்கான நெதர்லாந்து துாதராக நியமிக்கப்பட்டார். ஒரே வாரத்தில் இரு நாடுகளின் துாதர்களாக இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்:மொராக்கோ நாட்டிற்கான அமெரிக்க துாதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புனித் தல்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.