மரத்தில் மோதி தீப்பிடித்த கார்| Dinamalar

கதக் : மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் மூன்று வாலிபர்கள் உடல் கருகி பலியாயினர்.கதக்கின் ரோனாவில் இருந்து கதக் நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரோனா நகரின் அரசு பஸ் டிப்போ அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.மோதிய

வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. உள்ளே மாட்டி கொண்ட மூன்று வாலிபர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை வெளியில் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.இதனால் மூன்று பேரும் கருகி உயிரிழந்தனர். அவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. ரோனா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.