உக்ரைனை விட்டு 33 லட்சம் பேர் வெளியேறியதாக ஐ.நா. தகவல்.. 65 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து உள்நாட்டிலே இடம் பெயர்ந்ததாக ஐ.நா. அறிக்கை

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு 33 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 25-வது நாளை எட்டிய நிலையில் வாழ்வாதாரம் இழந்த உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளை நோக்கி பெயர்ந்து வருகின்றனர்.

இதுவரை 33 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புகலிடம் கேட்டு அண்டை நாடுகளுக்கு சென்றதாகவும் உள்நாட்டில் 65 லட்சம் பேர் வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 20 லட்சம் பேர் போலந்தில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.