ஹிஜப் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தை 3 பேர் கைது

கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜப் அணிய விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத்தை சேர்ந்த மூன்று பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர்கள் நீதிமன்றத்துக்கு எதிராகப் பேசியதாக பெங்களூர் விதான சவுதா காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் நீதிபதி மரணத்தை சுட்டிக் காட்டி மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.