2022 ஆசிய ரி-20 கிரிக்கட் போட்டி ,ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்

2022 ஆண்டின் ,ஆசிய ரி-20 கிரிக்கட் வெற்றிக் கிண்ண போட்டியை இலங்கையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று (19)  நடைபெற்ற ஆசிய கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.