தாயின் கண் முன்னே சிறுமி| Dinamalar

காமாட்சிபாளையா : இளநீர் குடிக்க சென்றபோது நான்கு வயது சிறுமி ஆட்டோ மோதி உயிரிழந்தார்.பெங்களூரு காமாட்சிபாளையா அருகே உள்ள காவேரிபுராவை சேர்ந்தவர் புவனா, 4. இவர் நேற்று தாயுடன் காமாட்சிபாளையாவில் சாலையோரம் இளநீர் குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்களின் பின்பக்கமாக, கேஸ் டேங்கர் ஏற்றிய ஆட்டோ வந்து நின்றது. அதன் டிரைவர் தனஞ்செய் இன்ஜினை ஆப் செய்யாமல் அப்படியே நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். ‘ஹேன்ட் பிரேக்’ போடவில்லை.இதனால் ஆட்டோ திடீரென முன்னோக்கி சென்றதில் புவனா மீது மோதி, கீழே தள்ளி கழுத்தின் மீது சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயம் அடைந்த சிறுமியை டிரைவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காமாட்சிபாளையா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.