உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்?

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து இறுதி முடிவெடுக்க நாளை பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் கூடுகிறது.

புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக மேலிடப் பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் இன்று உத்தரகாண்ட் செல்கின்றனர்.

நாளை முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷதாப் ஷாம்ஸ் அறிவித்துள்ளார். முதலமைச்சர் பதவிக்கு புஷ்கர் சிங் தாமியின் பெயர் முன்னிலையில் இருந்த போதும் மேலும் சிலரது பெயர்களையும் பாஜக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.