ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த| Dinamalar

பெங்களூரு : ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த 9.23 கோடி ரூபாய் மதிப்பிலான 46.799 கிலோ போதைப்பொருளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக, சுங்க அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு விசாரணை குழு, விமான சரக்கு ஆணையரகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு ஏற்றுமதி பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, சென்னையை சேர்ந்தவர் அனுப்பும் பார்சலை பரிசோதித்த போது, பலதரப்பட்ட சமையல் பாத்திரங்கள் இருந்தன.இந்த பாத்திரங்களின் கீழ்பகுதியில், 46.799 கிலோ எடையுள்ள ‘எபிடிரைன்’ என்ற போதைப்பொருள் கடத்த முயற்சித்தது தெரியவந்தது.இதன் மதிப்பு, 9.23 கோடி ரூபாய். இது குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.