யோகி அமைச்சரவை மார்ச் 25 அன்று பதவியேற்க உள்ள நிலையில் நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மார்ச் 25 அன்று பதவியேற்க உள்ள நிலையில், நாளை லக்னோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

திங்கள் காலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.

கூட்டத்துக்குப் பின் அமித் ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் கூடிப் பேசிப் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை இறுதிசெய்வர் எனக் கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.