ஹோலியில் சோகம்.: ஆற்றில் குளித்த 6 சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஒடிசாவில் ஹோலி விளையாடிவிட்டு ஆற்றில் குளித்த 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 6 சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக  6 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காவல்துறையினரின் தகவல்படி, முதலில் நீரில் மூழ்கிய ஒரு சிறுவனை காப்பாற்ற முயன்றபோது அடுத்தடுத்து 5 சிறுவர்கள் உள்பட 6 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறுகின்றனர்.  

image
நேற்று (சனிக்கிழமை) மாலை வரை 3 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இரவு 7 மணிக்குப் பிறகு இருட்டியதால் தேடல் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலையிலிருந்து எஞ்சியுள்ள 3 சிறுவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் 6 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதையும் படிக்க: சென்னை: ரத்தக் கரையுடன் அமர்ந்திருந்த நபர் – விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த குற்றம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.