கார் கண்காட்சி நடைபெற்ற இடத்தில், துப்பாக்கியால் சுட்டு மர்மநபர் தப்பியோட்டம் – ஒருவர் பலி

மெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் கார் கண்காட்சி நடைபெற்று வந்த இடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 10 பேர் வரை படுகாயம் அடைந்தனர். டேஷா கவுண்டியில் உள்ள துமாஸ் நகரில் நேற்றிரவு கார் கண்காட்சி நடைபெற்று வந்தது.

அப்போது அந்த இடத்திற்கு வந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்தது சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.