3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. திமுக பொறுப்பாளர் போக்சோவில் கைது..!

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் சின்னகரை பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரி மான சிவக்குமார் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று 3 வயது குழந்தை என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீட்டிற்கு சென்ற சிறுமி கண்ணீருடன் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திமுக பிரமுகர் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.