பெண்கள், குழந்தைகள் தங்கியிருந்த பள்ளியில் ரஷ்யா குண்டு வீச்சு.!

400 பேர் தங்கியிருந்த மரியுபோல் பள்ளியின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்யா தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்தப் பள்ளி மீது ரஷ்யப் படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் மரியுபோல் நகரின் கிழக்குப் பகுதியில் ஏராளமான கட்டடங்கள் இடிந்துள்ளதாகவும், அதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.