நெருப்பில்லாம பொகையாது சிம்பு: பரபரக்கும் கோலிவுட்

சிம்புவுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்து, குழந்தை, குட்டியுடன் அவரை சந்தோஷமாக பார்க்க ஆசைப்படுகிறார்கள் பெற்றோர். தம்பி, தங்கை எல்லாம் கல்யாணம் செய்து செட்டிலாகியும், வீட்டின் மூத்த பிள்ளை இப்படி இன்னும் சிங்கிளாகவே இருக்கிறாரே என்று பெற்றோர் வருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் சிம்புவும், நடிகை நிதி அகர்வாலும் காதலிப்பதாகவும், லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருவதாகவும் பேச்சாக உள்ளது. மேலும் நிதி அகர்வாலை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொண்டார் டி. ராஜேந்தர் என்று கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு பட வேலை முடிந்தவுடன் சிம்புவுக்கும் திருமணம் என்கிறார்கள். இருப்பினும் இது குறித்து
சிம்பு
தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

ஊரில் எத்தனையோ நடிகைகள் இருக்க,
நிதி அகர்வால்
பெயர் மட்டும் சிம்புவுடன் சேர்ந்து அடிபடுகிறது என்றால் ஏதோ காரணம் இருக்கும். நெருப்பு இல்லாமல் புகையாது என்கிறார்கள் ரசிகர்கள்.

சிம்புவை மணக்கோலத்தில் பார்க்க அவரின் பெற்றோர் மட்டும் அல்ல ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவம் மட்டும் நடந்துவிட்டது என்றால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துவிடுவார்கள்.

வெயிட்டை குறைத்த பிறகு சிம்புவின் கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். மேலும்
பிக் பாஸ் அல்டிமேட்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் திருமணமும் நடந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.