தூதரக அலுவலகம் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்….

சில நாடுகளில் இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையிலாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வருட காலப்பகுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,நாட்டின் நிதி நிலைமையின் காரணமாக சிட்னி கொன்சியுலர் அலுவலகம் , ஈராக்கில் பாக்தாத் மற்றும் சுவிடனில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மூட வேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அடிக்கடி கவனத்தில் கொண்டு இந்த அலுவலகம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம். நாட்டின் நிதி நிலைமைய சீராகும் வரையில்  தற்காலிக நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளபம்டுள்ளதாக பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.