சீன விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: சீன விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம்,  குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 132 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த  விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.  இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.  விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து கடுமையான புகை எழுந்துள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  சீனாவில் 132- பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானத செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.