133 பயணிகளுடன் சென்ற சீன விமானம், மலைப்பகுதியில் விழுந்து விபத்து.!

சீனாவில் 133 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சோ நகருக்கு 133 பயணிகளுடன் புறப்பட்டது. இந்திய நேரப்படி காலை 10.40 மணிக்கு குன்மிங்கில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

அப்போது எதிர்பாராவிதமாக குவாங்சி பகுதியில் உள்ள வூஷூ என்ற நகருக்கு அருகே மலைகள் சூழ்ந்த இடத்தில் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. பிற்பகல் 12.35 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கவிருந்த நிலையில், காலை 11.52 மணியளவிலேயே, கட்டுப்பாட்டு அறை உடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் கீழே விழுந்து நொறுங்கியதை அடுத்து, அந்த மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பயணிகள் உயிரிழந்தது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், அதில் இருந்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அந்நாட்டில் கடைசியாக 2010ஆம் ஆண்டில் தான் விபத்து நிகழ்ந்ததாகவும், அதில் பயனித்த 44 பேர் உயிரிழந்ததாகவும் ஏவியேஷன் சேப்டி நெட்வொர்க் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.