அந்த வார்த்தையை கேட்டாலே டென்ஷன் ஆகுது : துல்கர் சல்மான்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். இவரது படங்கள் மலையாளத்தில் எந்தளவிற்கு வரவேற்பை பெருகின்றதோ அதைப்போல தமிழிலும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இவர் கடைசியாக நடித்த படங்களான
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
,
குரூப்
,
ஹே சினாமிகா
ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் PAN INDIA படம் பற்றி பேசியுள்ளார்.

விஜய்யை சீண்டிய பார்த்திபன் ? ஒரு வார்த்தையால் வெடித்த சர்ச்சை..!

அவர் கூறியதாவது, ” ஒரு மொழியில் அவர்களின் கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை PAN INDIA படம் என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வார்த்தையை கேட்டாலே எனக்கு எரிச்சலாகவுள்ளது என துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

தற்போது எங்கு சென்றாலும் PAN INDIA படம்,
பான் இந்தியா
ஸ்டார் எனத்தான் அழைக்கின்றார்கள். ஒரு படம் பல மொழிகளில் வெளியாவதால் பான் இந்திய படம் என்கின்றனர். இந்நிலையில் மலையாளத்தில் எடுக்கப்படும் சில படங்கள் அக்கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும். எனவே அங்கு அந்த படம் மாபெரும் வெற்றியடையும்.

அதே படத்தை தமிழிலோ, தெலுங்கிலோ வெளியிட்டால் அந்தளவிற்கு வெற்றிபெறாது. ஏனென்றால் இங்குள்ள ஒவ்வொரு மொழிகளிலும் கலாச்சார வேறுபாடு இருப்பதால் ரசிகர்கள் அனைத்து படங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே தான் துல்கர் சல்மான் இவ்வாறு கூறியிருக்கின்றார். தற்போது துல்கர் சல்மானின் இந்த கருத்து பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.