காதலி தற்கொலையை அறிந்து திருமணமான காதலன் எஸ்கேப்| Dinamalar

ஷிவமொகா : காதலன் கைவிட்டதால் மனமுடைந்த காதலி அவரது திருமண நாளில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் காதலன் திருமணம் முடிந்தவுடன் மண்டபத்தில் இருந்து தப்பி சென்றார்.ஷிவமொகாவில் உள்ள சஹ்யாத்திரி கல்லுாரியில் பேராசிரியையாக இருந்தவர் ரூபா, 28. இவருக்கும் டி.வி.எஸ்., கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றும் முரளி, 30 என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் ஐந்து ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இருவரும் பி.எச்டி., படித்து வந்தனர். ரூபாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். ஆனால் பி.எச்டி., முடித்தவுடன, தன் காதல் விவகாரத்தை கூறி, காதலனை திருமணம் செய்ய நினைத்தார். இதனால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே வந்தார்.இரண்டு மாதத்துக்கு முன் காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிய வந்தது. இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மனமுடைந்த ரூபா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.இதனால் அவரது வீட்டில் காதலனுடன் திருமணம் செய்து வைக்க பேச்சு நடத்தினர். காதலனும் திருமணத்துக்கு ஒப்பு கொண்டார்.இந்நிலையில், காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நேற்று திருமணம் நடந்தது. தகவலறிந்த காதலி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையறிந்த காதலன் திருமண மண்டத்தில், தாலி கட்டியவுடன் அங்கிருந்து தப்பி சென்றார். தொட்ட பேட் போலீசார், தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.