விருதுநகர்: காதலி தற்கொலை – சோகத்தில் காதலனும் எடுத்த விபரீத முயற்சி

விருதுநகரில் தனது காதலி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் காதலனும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
விருதுநகர் அருகே உள்ள ராமசாமி புறத்தை சேர்ந்தவர் சோலை மீனா (20). விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக இவர் பணிபுரிந்து வந்தார். இவரும், விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (28) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
image
இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா, இன்று காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அவரது காதலன் பிரவீன் குமாருக்கு தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த அவரும், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
image
முன்னதாக, தான் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒரு கடிதத்தை பிரவீன் குமார் எழுதி வைத்து அதை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் வைத்திருந்தார். அதில், தாங்கள் செய்து கொள்வதற்கு சோலை மீனாவின் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் தான் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.