விருதுநகரில் 8 கொடியவர்களால் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – கொந்தளிப்பில் மருத்துவர் இராமதாஸ்.!

விருதுநகரில் 8 கொடியவர்களால் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று, அளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகரில்  ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி மாணவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர்  தொடர்ந்து 6  மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இளம்பெண்ணை சீரழித்த கொடியவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது  ஆறுதல் அளிக்கிறது.  ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல.  மனிதநேயமின்றி, மிருகங்களைப் போன்று செயல்பட்ட  அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்!

விருதுநகர் பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், அதை படம் பிடித்து மிரட்டி தான் தொடர் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்.  பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் நீதி கேட்டு சென்ற போது அவரும் இதே குற்றத்தை செய்துள்ளார். இவர்களை மன்னிக்கக் கூடாது!

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, தங்களைப் பற்றிய விவரங்கள் வெளியில் வராமல், காவல்துறையை அணுகி நீதி பெறுவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான்  அவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட காரணம்.  இது குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.