இது எப்படி இருக்கு: ரஜினியை அதிர வைத்த தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிவது என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் மகன்கள் யாத்ரா, லிங்காவை காரணம் காட்டி சமாதானம் செய்து வைத்திருக்கிறார் ரஜினி.

தற்போதும் மகன்களை காட்டி, அவர்களுக்காக சேர்ந்து வாழுங்கள் என்றாராம். பிள்ளைகளின் சந்தோஷத்தை விட உங்கள் சந்தோஷம் பெரிது என்று நினைக்காதீர்கள் என்று ரஜினி எவ்வளவோ பேசிப் பார்த்தாராம். ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் மனம் மாறவில்லையாம்.

6 ஆண்டுகளுக்கு முன்பு ஒர்க்அவுட்டான ரஜினியின் லாஜிக் தற்போது வேலைக்கு ஆகவில்லை. இதற்கிடையே ட்விட்டர் கணக்கில் தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கிவிட்டார் ஐஸ்வர்யா.

பயந்தது நடந்துடுச்சு: தனுஷ் ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய ஐஸ்வர்யா
இதன் மூலம் பிரிந்தது, பிரிந்தது தான். இனி தனுஷுடன் சேரப் போவது இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் ஐஸ்வர்யாவை மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தனுஷின் பெயரை ஐஸ்வர்யா நீக்கியதை பார்த்த
தனுஷ்
ரசிகர்கள் மனமுடைந்துவிட்டார்கள். வேண்டாம் அண்ணி, இது தவறான முடிவு என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.