மாஜி கணவருக்கு எதிராக சமந்தா செய்த காரியம்: நாக சைதன்யா கொடுத்த பதிலடி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
சமந்தா
. தற்போது தமிழில்
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில்
விஜய் சேதுபதி
நடித்து வரும் ‘
காத்து வாக்குல ரெண்டு காதல்
‘ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் கலக்கி வருகிறார் சமந்தா.

என்னது.. டிடிக்கு வளைகாப்பா..?: லீக்கான போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்..!

இந்நிலையில் சமந்தா தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவை அன் பாலோ செய்துள்ளார். இதனை தொடர்ந்து பதிலுக்கு நாக சைதன்யாவும் சமந்தாவை அன் பாலோ செய்துள்ளார். இவர்களின் இந்த செயல் சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விவாகரத்து அறிவிப்பின் போது இருவரும் எங்களுக்குள் நட்பு தொடரும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது சோஷியல் மீடியாவில் இருவரும் ஒருவரை ஒருவர் அன் பாலோ செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி கட்டுப்பாட்டில் தமிழ் சினிமா? – கே.ராஜன் நேர்காணல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.